அடுத்த 5 தினங்களுக்கு தென், வட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கனமழை! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் மேற்கு பருவமழை மேற்கு இந்திய பகுதிகளில் மீண்டும் வலுப்பெற்று வருவதாகவும், இதன் காரணமாக கேரளா, கடலோர கர்நாடக மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில்  அடுத்த சில தினங்களுக்கு கனமழை தொடரும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மேலும், வரும் 5 நாட்களுக்கு பெரும்பாலான வடமாநிலங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இன்று மற்றும் நாளை கிழக்கு மற்றும் மேற்கு அரேபிய கடல் பகுதியில் சீற்றம் அதிகமாக இருக்கும என்பதால் மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.