அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுகவை சேர்ந்தவர் முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.   தினங்களுக்கு பிறகு சென்னையில் உள்ள போரூரில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


பி.எச் பாண்டியன்  நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்த பேரியில் பிறந்தவர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது அதிமுகவில் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் பி.எச்.பாண்டியன். 


இவர் 1977, 1980, 1984, 1989-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் தொடர்ச்சியாக 4 முறை அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்றிருந்தார்.1999 திருநெல்வேலி மக்களவை தொகுதியிலும் போட்டியிட்டு வென்றுள்ளார்.


இந்நிலையில் இன்று முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.