ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் பெண் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்க (இணைத்தல், கற்றல் மற்றும் முன்னேறுதல்) நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய உறுப்பினரும், நடிகையுமான கெளதமி, மற்றும் அச்சு, மின்னணு, ஊடக துறையை சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 9 வயது இன்ஸ்டா ரீல்ஸ் சிறுமி தற்கொலை... பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்


அப்போது நிகழ்வில் கனிமொழி எம்.பி.பேச்சு., பத்திரிக்கையாளர்கள் துறையில் அடிப்படை வசதிகள் கூட பெண்களுக்கு இல்லாமல் இருந்த நிலையில் இருந்து இன்று பெண் பத்திரிக்கையாளர்கள் தொடர்பாக பயிலரங்கம் வரை வந்துள்ளோம்.



எந்த துறையை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் ஒரு முரன்பாடான கருத்தை அந்த பெண் முன்வைக்கும்பொழுது அதன் கீழே வரக்கூடிய கமெண்டுகள் என்ன என்பதை அனைவரும் உணர்ந்திருப்பீர்கள். ஒரு ஆண் எப்படி தன்னை பற்றிய கருத்தை ஒதுக்கி தள்ளிவிட்டு போகிறார்களோ, அதேபோல் பெண்ணும் ஒதுக்கி தள்ளிவிட்டு போக வேண்டும். ஆனால் அதற்கான சூழ்நிலையை சமுதாயம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இந்த சமூகம், குடும்பம் நம்மிடம் எதிர்பார்க்க கூடிய விஷயங்கள் என்பது முற்றிலும் மாறுபட்டது என்ற அவர், உலக அளவில் 73% பெண் பத்திரிக்கையாளர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்றார்.


மேலும் படிக்க | மேக்கப்பில் பெண்களையே தோற்கடித்த ஆண்கள்! வைரலாகும் புகைப்படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ