கோயம்புத்தூரில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் ''120'' மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே செயல்பட்டு வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோயம்புத்தூரில் உள்ள அரசு பள்ளிக்கூடம் ஒன்றில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நிறைந்த 120 மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே செயல்பட்டு வருகிறார். 


இது குறித்து அந்த பள்ளி ஆசிரியர்  மற்றும் பெற்றோர்கள் கூறும்போது;- எங்கள் பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 120 மாணவர்கள் பயிலுகின்றனர். 


அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஒரே ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு ஒரு துணை ஆசிரியர் மட்டுமே உள்ளனர். அதனால், மாணவர்கள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படுகிறது.


எனவே, மாணவர்களின் திறமை மேம்பட அவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு மாணவர்களுக்கு தேவையான உரிய வசதியை செய்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.