அதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவில் இரண்டு அணிகளாக உள்ளன. இந்த இரு அணிகளும் இன்று இணையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று அவசரமாக சென்னை வருகிறார். மும்பையில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு இன்று சென்னை வருகிறார்.


இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டார். இதனால் இன்று பதவியேற்பு, அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.