விஜயபாஸ்கர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு,  வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்
கூறியுள்ளார்/


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குட்கா விற்பனை செய்ய அனுமதி தந்ததில் லஞ்சம் பெற்றதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், குட்கா பிரச்சனையை நான் சட்டரீதியாக சந்திப்பேன், நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை விரைவில் நிரூபிப்பேன் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, விஜய பாஸ்கர் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, வழக்கை சந்தித்து, தான் குற்றமற்றவர் என்பதை நிருபித்து விட்டு, பிறகு அமைச்சர் பதவியில் அமர வேண்டும் என கூறினார்.