திமுக தலைவர் MK ஸ்டாலின் அவர்களின் சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக உள்ளோம் என பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இன்று திமுக தலைவராக பதவியேற்ற MK ஸ்டாலின் அவர்கள், பதவியேற்பு நிகழ்ச்சியின் போடு "இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட இளைஞர்கள் அனைவரும் திறண்டு வாருங்கள்" என அழைப்பு விடுத்தார்.



இந்நிலையில் இவருக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் "திமுக தலைவர் MK ஸ்டாலின் அவர்களின் சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.



மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் வரும் செப்.,2-ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று காவி தொண்டர்களின் பலத்தை காட்ட தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 



இந்து கோவில்களை காத்திட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி வரும் செப்., 2-ஆம் நாள் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் TNHRCE சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படவுள்ளது. அந்த அரப்போராட்டத்திற்கு H ராஜா அவர்கள் தலைமை ஏற்கவுள்ளார்.



இந்நிலையில் இன்று திமுக தலைவராக பதவியேற்ற ஸ்டாலின் காவி தொண்டர்கள் குறித்து கருத்தினை வெளியிட, அவரது கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் H ராஜா அவர்களும் மோடி அரசின் பலத்தை காண்பிக், நடைபெறவிருக்கும் உண்ணாவிருத போராட்டத்தினை கருவியாக கையில் எடுத்துள்ளார்.