சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் கடந்த மாதம் இறுதியில் பெரும்பாலான இடங்களில் மழை கொட்டியது. இதனால் வெயிலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர். ஆனால் வெயில் தனது உக்கரத்தை காட்டத் தொடங்கியது. 


சென்னையில் இரண்டு நாட்கள் வெயில் வெழுத்து வாங்கிய நிலையில் இப்போது மழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், சென்ட்ரல், அண்ணா சாலை, சிந்தாரிப்பேட்டை  உள்பட பலபகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல்லாவரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. வெயில் வாட்டிய நிலையில் மழை பெய்வது  பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.