தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள எல்லை மாவட்டங்களில் வெள்ளி, சனி கிழமை ஆகிய தினங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது. 
திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கோவை, தேனி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 3 சென்டி மீட்டர் மழையும், கமுதி, பன்னிப்பட்டு, பெரியகுளம் ஆகிய இடங்களில் 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக புவியரசன் தெரிவித்தார். சென்னையை பொறுத்த வரையில் நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பொழிய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.


மேலும் அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் காரணமாக 12 சென்டி மீட்டர் முதல் 20 சென்டி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் புவியரசன் கூறியுள்ளார். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.