சென்னை: கேரளாவை ஒட்டியுள்ள தென் மேற்கு தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மற்றும் நெல்லை போன்ற மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


அதேபோல கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, திருச்சி, கோயம்புத்தூர் உட்பட 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் கொடைக்கானல் பகுதியில் தலா 7 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.