செமஸ்டர் தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் பொன்முடி
கொரோன மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பிப்ரவரி 1 முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த முடிவு செய்யபட்டு உள்ளது.
சென்னை: பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 20 தேதி வரை ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். அதே நேர்த்தில் கல்லூரி இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இணையதளம் மூலம் நடைபெறாது என உயர்கல்வித் துறை அமைச்சர் அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
இன்று அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியது, "கலை அறிவியல் பொறியியல் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும். இறுதியாண்டு பருவத் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட மாட்டாது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
கொரோன மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பிப்ரவரி 1 முதல் 20 ஆம் தேதி வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த முடிவு செய்யபட்டு உள்ளது.
ஏற்கனவே கல்லூரி மாணவர்களுக்கு இம்மாதம் 31 ஆம் தேதி வரை விடுப்பு இருக்கும் என அறிவிக்கபட்டு இருந்தது. தற்போது மேலும் சில நாட்கள் நீட்டிப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஒரே மாதிரியான வகையில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். அதேபோல தேர்வுக்கான விடைத்தாள்களை பதிவேற்றம் செய்து இ-மெயில் மூலம் அனுப்பி வைக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR