மாங்கல்ய பூஜை செய்வதாக கூறி சென்னை தொழிலதிபரிடம் 15 பவுன் தாலி சங்கிலி, 25 ஆயிரம் பணம் மோசடி செய்த வழக்கில் கோவையில் சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் பிரிவு துணை தலைவர் பிரசன்ன சுவாமிகள் உட்பட 4 பேர் மீது கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்நிலையில் கோவையில் உள்ள தனது வீட்டில் இந்து மக்கள் கட்சியின் ஜோதிட பிரிவு துணைத் தலைவர் பிரசன்ன சுவாமிகள் தனது  மனைவி, மகள், தாயாருடன் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அதாவது வீட்டில் குடும்பத்துடன் பூச்சு மருந்து குடித்துள்ளனர். இதை அறிந்த பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் பிரசன்னா சுவாமியின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது 65) உயிரிழந்தார். மற்றவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இடப்பிரச்சினையை தீர்த்து தருவதாக கூறி தொழில் அதிபரிடம் 15 பவுன் நகை, ரூ.25½ லட்சம் மோசடி செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் கருப்பையா (வயது 45) ஒரு தொழிலதிபர். இவர் தனியாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான காலி இடம் செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் உள்ளது. அந்த இடம் பிரச்சினையில் இருந்துள்ளது. இந்தநிலையில் கருப்பையாவுக்கு கோவை செல்வபுரத்தை சேர்ந்த ஜோதிடரும், இந்து மக்கள் கட்சி ஜோதிடர் பிரிவு துணை தலைவருமான பிரசன்னா (வயது 41) என்பவர் அறிமுகமானார். அவர் இடம் சம்மந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து தருவதாக கருப்பையாவிடம் கூறியதாக தெரிகிறது.


மேலும் படிக்க: மயிலாடுதுறை: சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்: கடைசி நிமிட டிவிஸ்ட்!


அதை நம்பிய கருப்பையா, பிரசன்னாவிடம் கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் ரூ.25 லட்சத்து 59 ஆயிரத்து 200 கொடுத்ததாக தெரிகிறது. மேலும், மாங்கல்ய பூஜை செய்ய வேண்டும் என்று கூறி கருப்பையா மனைவியின் 15 பவுன் தாலி சங்கிலியையும் பிரசன்னா வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இட பிரச்சினையை பிரசன்னா தீர்த்து வைக்காமல் மோசடி செய்ய முயன்று உள்ளார். இதற்கு பிரசன்னாவின் மனைவி அஸ்வினி (வயது 31), ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த ஹரிபிரசாத் (வயது 28), பிரகாஷ் (வயது 58) ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர். 


இது குறித்து கருப்பையா கொடுத்த புகாரின் பேரில் ஜோதிடர் பிரசன்னா, அவரது மனைவி அஸ்வினி, ஹரிபிரசாத், பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.


இந்நிலையில் இன்று இந்து மக்கள் கட்சியின் ஜோதிடர் அணி துணைத் தலைவர் பிரசன்னா உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தன்னுடைய குடும்பத்துடன் (4 பேர்) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பிரசன்னாவின் தாயார் சிகிச்சை பலனின்றி உரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து தற்கொலை செய்யப் போவதற்கு முன்பு வீடியோ ஒன்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இதில் இந்த வழக்கு பொய்யானதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆழ்கியுள்ளதாகவும், தனக்கு நடந்தது போல் வேறு எவருக்கும் நடக்க கூடாது என வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: செயினை அறுக்க முயன்ற திருடர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ