தமிழக அரசு நடத்தும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி. டெட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக வழக்கு பதிவிடப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் தானாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுபற்றிய விசாரணையில், தமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டனர் என கூறி எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


இதுபற்றி எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் கேள்வி எழுப்பிய அவர்கள், பணம் கொடுத்து அரசுப் பணியில் சேர்பவர்கள் எப்படி நேர்மையாக பணியாற்றுவார்கள்?, முறைகேடுகள் தொடர்பாக எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.