சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன் என மதுரை தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மதுரையில் தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு மதுரை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்பொழுது அவர், மதுரை மண்ணின் பெருமையை தோழர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பார். கீழடி பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர். தமிழக எழுத்தாளர். மதுரையை காப்பாற்ற வேண்டும், மதுரைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டு இருப்பவர். இந்த மதுரை மண்ணில் இருந்து சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்திற்கு செல்வது மதுரைக்கே பெருமை. அவரை ஆதரியுங்கள். 


தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக மக்களுக்கு செய்யும் நன்மைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், அதிமுக மற்றும் பாஜக மக்களுக்கு நல்ல திட்டங்களையோ நன்மைகளோ செய்யமாட்டார்கள். ஆனால் திமுக அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் எனக் கூறினார்.


இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க. ஸ்டாலின், 


"சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்" - இது தலைவர் கலைஞர் அவர்களின் வாக்குறுதி மட்டுமல்ல!


கலைஞரின் மகனான இந்த ஸ்டாலினின் வாக்குறுதியும் அதுதான்! சொன்ன வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன்!


ஆதரிப்பீர் உதயசூரியன்!


நாடும் நமதே! நாற்பதும் நமதே!


எனப் பதிவிட்டுள்ளார்.