தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றுமாறு நான் பதிவிடவில்லை. பேஸ்புக் அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார் என பேஸ்புக்கில் H. ராஜா பதிவு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு எதிராக தமிழக தலைவர்கள் ஒன்று கூடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 


இந்த சர்ச்சை கருத்தை தொடர்ந்தது வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோவை பாஜக அலுவலகம் மீது சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடினர். 


இந்நிலையில் தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை தகர்ப்போம் என பாஜக-வின் தேசிய செயலாளர் H. ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதால் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஒரு நாளுக்கு பிறகு பேஸ்புக்கில் H. ராஜா விளக்கம் அளித்து பதிவிட்டு உள்ளார். இது குறித்து அவர்,




இவ்வாறு போஸ்ட் செய்துள்ளார்.