சென்னை: அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த 75 நாட்களும் தான் மருத்துவமனை சென்ற போதும் ஒரு முறை கூட அவரை சந்திக்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சசிகலா முதல்வராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் அளித்துள்ள பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவரை அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 


இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில்:-


ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டது முதல் ஒரு முறை கூட அவரை நான் சந்திக்கவில்லை, அவரை நான் சந்திக்காதது எனது துர்பாக்கியம் என்றே கருதுகிறேன். நான் மட்டுமல்லாமல்சசிகலா குடும்பத்தினரை தவிர மற்ற அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என யாரும் அம்மாவை சந்தித்ததாக எனக்கு தெரியவில்லை. 


இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.