மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முக வடிவத்தில் 68 கிலோ எடையில் இட்லி செய்து சென்னை மெரீனா பீச்சுக்கு அதிமுக தொண்டர்கள் கொண்டு வந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 5-ம் தேதி தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் மெரீனா பீச்சில் எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர்  நினைவிடத்தில் இன்று வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  


இந்நிலையில் இன்று அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் முக வடிவத்தில் 68 கிலோ எடையில் இட்லி செய்து மெரீனா பீச்சுக்கு கொண்டு வந்தனர்.