மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் பாஜக காணாமல் போய்விடும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் முகாமிட்டு இருந்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தற்போது புதுச்சேரி திரும்பினார். இதையடுத்து, செய்தியாளைகளை சந்தித்த அவர் டெல்லியில் மத்திய உள்துறை இணை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்து பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக பேசியதாக தெரிவித்தார். 


அப்போது அவர் மத்திய அரசின் பங்களிப்பு திட்டத்தின் கீழ் நிதி அளிப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டார். அதற்கான விளக்கங்ளை அளித்தேன். மேலும், வழக்கமான நடைமுறைகளை பின்பற்றியே பட்ஜெட் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பியது குறித்தும் தெரிவித்தேன். உள்துறை இணை செயலாளர் புதியவர் என்பதால் இந்த விளக்கங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.


அநேகமாக வரும் திங்கட்கிழமை மத்திய அரசின் ஒப்புதல் பட்ஜெட்டுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் இவர் மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் பாஜக காணாமல் போய்விடும் என்றும் மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.