சென்னை: ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பது தொடர்பாக தீபா ஆலோசனை நடத்தி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமழிக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது காலியாகவுள்ள ஆர்கேநகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் தீபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அவர் கூறினார். மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பின்னர் இந்தப் புகாரைக் கூறினார். தற்போது இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாராம் தீபா.