தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபோனி புயலால் தமிழகத்தில் வெப்பம் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புயல் ஒடிசாவில் கரையை கடந்ததால் இங்குள்ள ஈரப்பதத்தையும் இழுத்துச் சென்றது. இதனால் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்த நிலையில், இன்று முதல் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. கத்தரி வெயில் வரும் 29 ஆம் தேதி வரை நீடிக்கும் என கூறப்படுகிறது.


இதனால் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் வெளியே செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


வட தமிழகத்தை ஒட்டி வங்கக் கடலை ஃபானி புயல் கடந்து சென்ற போது, காற்றில் இருந்த ஈரப்பதத்தை உள்வாங்கிக் கொண்டதே இதற்கு காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 39 டிகிரி செல்சியஸ் பதிவாகும்.