தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஓர் அணியும், திமுக  தலைமையில் மற்றொரு அணியும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


காலை முதலே அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், சமூக சேவகர்கள் மற்றும் வயதானவர்கள் என அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 


அந்த வகையில், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாக்குசாவடியில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், நான் வாக்களித்து விட்டேன். நீங்கள் வாக்களித்து விட்டிர்களா? எனக் கேட்டுள்ளார்.