தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் இன்று சென்னையில் காலமானார். 86 வயதான அசோகமித்திரன் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஆவார். தியாகராஜன் என்பது இவரது இயற்பெயர். 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் செகந்தராபாத் நகரில் பிறந்தவர். பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்து குடியமர்ந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1996-ம் ஆண்டு தனது அப்பாவின் சிநேகிதர் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். 18-வது அட்சக்கோடு, ஆகாசத் தாமரை, மானசரோவர், கரைந்த நிழல்கள் உள்ளிட்ட ஏராளமான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.


தமிழக அரசின் இலக்கிய சிந்தனை விருது, எம்.ஜி.ஆர். விருது, என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருது, க.நா.சு விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் அசோகமித்திரன்.