கடந்த 2006 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், விதிமுறைகளை மீறி ஏர்செல் நிறுவனத்தில் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்தது என வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக இதற்கு கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில், அமலாக்கத் துறையும், சிபிஐ-யும் தனித்தனியாக ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது புகார் பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


அந்த வகையில் இன்று கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். ஏற்கனவே இவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ப.சிதம்பர மீது சி.பி.ஐ வழக்கு தொடர மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.