ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற சரத்குமாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற சரத்குமாருக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி வாடிவாசல் அருகில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். போராட்டக்காரர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.


மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கைது சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் இந்த போராட்டத்தில் பங்கேற்கச்சென்றார். அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மாணவர்கள், பொதுமக்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அதனைத்தொடர்ந்து சரத்குமார் திரும்பிச் சென்றார்.