மதுரை: ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் இளைஞர்கள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் அமைதியாக போராட்டம் நடந்து வருகிறது.


இந்நிலையில், மதுரை ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தில் கன்னியாகுமரி விரைவு ரயிலை மறித்து இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 


மேலும் பல ரயில்களின் இயக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.


சேலத்திலும், பெங்களூரு விரைவு ரயிலை மறித்து போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வலியுறுத்தி இந்த ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஒரு இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.