சென்னை: இன்று அதிகாலையில் தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திரண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலையில் வீட்டில் இருந்து வெளியில் வந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அப்போது அதிமுக தொண்டர்கள் தீபாவை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.


அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த தீபா:-


அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக தினமும் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தினமும் அவர்கள் நம்பிக்கையோடு என்னை வந்து பார்த்தனர். அவர்களது நம்பிக்கையை நான் வீணாக்க மாட்டேன்.


ஏற்கனவே நான் அரசியலில் இறங்கி விட்டேன். இது பற்றிய முழு விபரங்களையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது வெளியிடுவேன்.


இவ்வாறு தீபா கூறினார்.