சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க கோரி பொது நலன் மனு தாக்கல் செய்தார் டிராபிக் ராமசாமி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெயலலிதா மரணம் குறித்து பல சந்தேகங்கள் இருக்கிறது. அவர் மரணம் குறித்து சந்தகங்களுக்கு விடை கிடக்க வேண்டும். எனவே ஜெயலலிதா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் எனவும்,  உடல் நலக்குறைவால் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையின் கேமரா காட்சிகளை ஆராய வேண்டும். மேலும் அப்பல்லோவின் தலைவர் பிரதாப் ரெட்டியிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கேட்டு கொண்டுள்ளார்.


ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு தெலுகு யுவ சக்தி என்ற இயக்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பற்றிருந்தார். கடந்த 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அவர் மரணமடைந்தார்.