அரச அலுவலகங்களில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா புகை படங்களை தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 14-ம் தேதி மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அரச அலுவலகங்கள் மற்றும் அரசு திட்டங்களில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் திமுக மற்றும் பாமக சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்தனர். இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


இன்று விசாரித்த நீதிபதிகள் ரமேஷ், மகாதேவன் ஆகியோர், இது தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை அடுத்த மாதம் மார்ச் 20-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.