கோவை திருச்சி சாலையில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 812 சவரன் நகை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவை- திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று பிற்பகல் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்கிருந்து சுமார் 812 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.


இது தொடர்பாக பணியில் இருந்த பெண்கள் தங்கள் நிறுவன நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இன்று காலை அந்நிறுவனம் சார்பில் ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் கண்டுள்ளனர். 


இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை தேடும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.