சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல், பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பதவி உயர்வு அடைந்ததையடுத்து, பொறுப்புத் தலைமை நீதிபதியாக, ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.  


இந்நிலையில், மார்ச் 31-ம் தேதி, இந்திரா பானர்ஜி சென்னை ஐகோர்ட் புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக அவர், டெல்லி ஐகோர்ட்டில் 2-வது நீதிபதியாகப் பணியாற்றிவந்தார். இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இன்று பதவியேற்கிறார். காலை 9.30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.