உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திரா பானர்ஜி, வினித் சரண் மற்றும் KM ஜோசப் ஆகியோருக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா பதவி பிரமானம் செய்து வைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று பதவியேற்றுள்ள மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளை சேர்த்து, தற்போது உச்சநீதிமன்றத்தில் பணிபுரியும் நீதிபதிகளின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.


சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி உள்ளிட்ட 3 பேர் கொண்ட பட்டியலை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசு தலைவர் ஆணை பிரப்பித்தார். இதனையடுத்து இன்று இந்த பட்டியலில் இடம்பெற்ற 3 நீதிபதிகளும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.


சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியை உச்சநீதிமன்றத்தின் 8 வது பெண் நீதிபதியாக பதவியேற்றுள்ளார். 


18 MLA-க்கள் தகுதிநீக்கம், புதுச்சேரி நியமன MLA-க்கள் உட்பட வழக்குகளை விசாரித்து இரு வேறு தீர்ப்புகளை அளித்தவர் இந்திரா பானர்ஜி.


இந்நிலையில் இவர் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளதை அடுத்து தமிழக தலைவர்களின் தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது!