காளீஸ்வரி எண்ணை நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருமான வரி அதிகாரிகள் 200 பேர் கொண்ட குழுவினர் நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.


இந்நிலையில் காளீஸ்வரி நிறுவனம் 90 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்து வரிஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை இன்று அறிவித்துள்ளது. 


மேலும், வரி செலுத்த அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.