மக்கள் நீதி மய்யம் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் கொடியேற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 கடந்த ஆண்டு இதே நாளில்தான் மதுரையில் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். தொடக்க விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். 


இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கொடியேற்றினார்.


கட்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி இன்று பிற்பகல் நாகை மாவட்டம் செல்லும் கமல், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி வலைகளை வழங்குகிறார். அதன்பின்னர் இன்று மாலை திருவாரூரில் நடைபெற உள்ள கட்சி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.