சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் கமல்ஹாசனுடன் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான் சந்திப்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் கமல்ஹாசன் நாளை புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார். இதையொட்டி அவர் அரசியல் கட்சி தலைவர்கள், தன்னுடைய நலம் விரும்பிகளை சந்தித்து பேசி வருகிறார். நேற்று, அரசியலில் தனிக்கட்சி தொடங்கிய பாக்யராஜ், தனிக்கட்சி நடத்தி வரும் டி.ராஜேந்தர் ஆகியோரிடம் கமல்ஹாசன் தொலைபேசி வாயிலாக பேசினார். தான் தனிக்கட்சி தொடங்கிய பிறகு நேரில் சந்தித்து பேச விரும்புவதாக தெரிவித்தார். 


இதையடுத்து, நிலையில், கமல்ஹாசனை  இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார் பேட்டையில் கமல்ஹாசன் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 


இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்:- சீமானுக்கு என்னை தெரியும், எனது சீனிமாவை தெரியும், ஆனால் எனது கொள்கை பற்றி தெரியாது தெரியாது. எனது கொள்கை அவருக்கு முழுமையாக தெரியாத நிலையில் இப்போது ஆதரவு பற்றி கேட்பது சரியல்ல எனவும் அவர் கூறினார்.  


இந்த சந்திப்பையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான்:- அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவதை காலம் தான் முடிவு செய்யும் ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து இறப்பு வரை தீர்மானிப்பது அரசியல் தான்.