காஞ்சிபுரம் சங்கரமடம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உடல்நலக்குறைவு காரணமாக சங்கரமடம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் பிரிந்தது. மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 


கடந்த 3 மாதங்களாகவே ஜெயேந்திரர் மூச்சுதிணறலால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் தற்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறப்பட்டு வந்தது


இந்நிலையில் இன்றைய தினம் காலை அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு காஞ்சி சங்கர மடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காஞ்சி ஜெயேந்திரர் உயிரிழந்தார்.