தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதி எழுதியிருக்கும் கடிதத்தில், “ உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைத்தளங்களிலேயே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள்களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று  அறிவேன். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதலால்  அண்ணா நாமம் வாழ்க, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க என்று தினந்தோறும் கூறி, ஆட்சி நடத்திய அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பெயரைச் சொல்லி அரசியல் செய்து கொண்டிருக்கக் கூடிய நீங்களும், உங்கள் சகாக்களும், அண்ணா என்ன சொன்னார் ? அண்ணா என்ன பேசினார்? அண்ணா என்ன எழுதினார் ? அண்ணா எதைக் கடைப்பிடித்தார் ? என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குப் பின் கருத்துகளை தெரிவியுங்கள்.  


எதிர்க்கட்சித் தலைவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் என்றெல்லாம் பதவியை வைத்துக்கொண்டு, சுயநலமாக செயல்பட்டுக் கொண்டிருக்காதீர்கள்.  வெட்கப்பட்டுத் தலைகுனியக் கூடிய ஒரு நிலைமையை, திராவிடம் என்ற பெயருக்கும், அறிஞர் அண்ணா என்ற பெயருக்கும் உருவாக்கி இருக்கிறீர்கள். 


இத்துடன் அறிஞர் அண்ணா எழுதிய ஐந்து புத்தகங்களை உங்களுக்கு அனுப்பி உள்ளேன். இதை நீங்களும் உங்களது முப்பத்து மூன்று முன்னாள் அமைச்சர்களும்  அமர்ந்து படிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். 



படிப்பதற்கு முடியாவிட்டால் யாரையாவது படிக்கச் சொல்லி அதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். சுப வீரபாண்டியன், திராவிட கழகத்தைச் சேர்ந்த அருள்மொழி அண்ணாமலை அக்கா, போன்றோரை அழைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழுவிலோ அல்லது பொதுக்குழுவிலோ தயவு செய்து அவர்களிடம் திராவிடம் என்றால் என்ன ?  அறிஞர் அண்ணா எதற்காக இந்த கட்சியை உருவாக்கினார் ?என்றெல்லாம் தெரிந்து கொண்டு அதற்குப் பிறகு பேசுங்கள். 


மேலும் படிக்க | அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் வார்டுகளை ரெடி பண்ணுங்க - முன்னாள் அமைச்சர் வலியுறுத்தல்


பாஜகவிற்கு அடிமையாக இருப்பதையும், அண்ணாமலைக்கு அடிமையாக இருப்பதையும் விட்டுவிட்டு நல்ல அரசியலைக் கையில் எடுங்கள் . அப்படி இன்றி அண்ணா கூறியதை உங்களால் கடைப்பிடிக்க முடியாமல் போய்விட்டதானால், தயவு செய்து கட்சி பெயரை அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொள்ளுங்கள். 


அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அங்கே இருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ