உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி இன்று மாலை தனது கோபாலபுரம் வீட்டிற்கு திரும்பினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த நவம்பர் மாதம் உடலில் ஒவ்வாமை காரணமாக கொப்பளங்கள் ஏற்பட்டது. இதற்காக கடந்த 15-ம் தேதி இரவு கருணாநிதிக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை காவேரி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தபோது, தொண்டை, நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடுமையான மூச்சு திணறல் அவதிக்கு உள்ளாகுவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. அவரது தொண்டையில் துளையிட்டு சுவாச குழாய் (டிரக்கியாஸ்டமி) பொருத்தப்பட்டது.


இதனால் அவரது உடல் நிலை சீரானது. டி.வி. பார்ப்பது, பத்திரிகை படிப்பது போன்ற பணிகளில் ஈடுபடத்தொடங்கினார். தற்போது அவர் இயல்பாக சுவாசிக்கிறார். 


இதனையடுத்து கருணாநிதி மருத்துவமனையிலிருந்து இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட இருப்பதை தொடர்ந்து திமுக பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அவரது மகள் கனிமொழி ஆகியோர் மருத்துவமனை வந்தனர். இதனையடுத்து தனது பிரத்யோக வாகனம் மூலம் காவேரி மருத்துவமனையில் இருந்து தனது கோபாலபுரம் வீட்டிற்கு கருணாநிதி திரும்பினார்.