திமுக தலைவரும் கருணாநிதிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கலைஞர் கருணாநிதி (வயது 92) சுவாசக் கோளாறு மற்றும் சளித் தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்றிரவு திடீரென அனுமதிக்கப்பட்டார்.


இந்நிலையில் காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- சளித் தொற்று மற்றும் நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பு காரணமாகக் கருணாநிதிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கருணாநிதிக்கு முச்சுத்திணறலுக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்படுகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.   


அண்மைக்காலத்தில், ஏற்கனவே இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உடல்நலம் பெற்று வீடு திரும்பிய அவர் நேற்று 3_வது முறையாக மருத்துவமனை அனுமதிக்க பட்டுள்ளார்.