திமுக தலைவர் கருணாநிதி கடந்த நவம்பர் மாதம் ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் டிசம்பர் மாதம் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பூரண குணம் அடைந்து வீட்டிற்கு திரும்பிய அவரை ஓய்வு எடுக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து வீட்டிலேயே சிகிச்சை பெறறு கருணாநிதி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாது.


இதுதொடர்பாக அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அனுமதி அளித்தால் தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி விரைவில் சந்திப்பார் என கூறிஉள்ளார்.