ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பனிச்சரிவு ஏற்படுகிறது. இந்த பனிச்சரிவில் சிக்கி மற்றொரு தமிழக ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு காஷ்மீரில் சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதில், ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த சந்தரபாண்டி மற்றும் தஞ்சைச் சேர்ந்த இளவரசு ஆகியோரும் உயிரிழந்தனர்.


இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மற்றொரு தமிழக ராணுவ வீரர் கண்ணன் காஷ்மீர் பனிச்சரிவில் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.