சென்னை செம்பக்கத்தில் பகுதிகளில் வசித்து வருபவர் சுதா (வயது 30). இவர் தனியார் கம்பெனி ஒன்றில் தகவல் தொழில்நுட்ப பொறியாளர் ஆக பணியாற்றி வருகிறார். சக ஊழியர் ஆக பணியாற்றும் நன்மங்கலத்தை சேர்ந்த கார்த்திக் (33) என்பரை கடந்த 4 ஆண்டுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவரது கணவர் கார்த்திக் விவாகரத்து கேட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதில் சுதாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கார்த்திக் வீட்டுக்கு சென்ற சுதா இது பற்றி அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதற்கு கார்த்திக் நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதாகவும் அதன் வழியாக தீர்வு காணலாம் என கூறியுள்ளார்.


இந்த நிலையில் மீண்டும் சுதா அவர்கள் கார்த்திக் வீட்டுக்கு சென்று இது குறித்து பேசியும் அவருக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. கணவர் கார்த்திக் முன்பு சொன்னது போல் நீதிமன்றத்தில் பார்த்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஏற்கனவே சற்று நாள் ஆகவே மனமுடைந்த சுதா நேற்று மாலை 5 மணியளவில் வேளச்சேரி விஜயநகர் இரண்டு அடுக்கு புதிய மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்ததில் சென்று கொண்டிருந்தார்.


அப்போது பாலத்தின் மையப்பகுதிக்கு சென்றதும் திடீரென இருசக்கர வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் தலைக்கவசம் மற்றும் செருப்பை கழற்றி வைத்து விட்டு (சுமார் 40 அடி உயர உள்ள) இரண்டு அடுக்கு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து விட்டார். கீழே விழுந்த சுதாவை பார்த்து அருகில் இருந்த பொதுமக்களுக்கு பயம் அடைய செய்தது.



உடனே தகவல் அறிந்த காவல்துறைனர் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் ரத்தக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேளச்சேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து சுதாவின் தற்கொலைக்கு இது தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | அதிமுக தோற்றதால் தனது காலை கிழித்து கொண்ட தொண்டர்!


(தற்கொலைக்கு முயல்வது எதற்கும் முடிவல்ல: தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.)


மேலும் படிக்க | வரலாற்று சாதனை படைத்த எம்.பிக்களை வாழ்த்தி, அறிவுரை சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ