திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட மாதர் பாக்கம் கிராமத்தில் உள்ள மைதானத்தில் கடந்த 9 ஆம், தேதி உடலின் பல இடங்களில் காயங்களுடன் ஆடைகள் களையப்பட்ட நிலையில் இளம் பெண் சடலம் இருப்பதாக அப்பகுதிவாசிகள் அளித்த தகவலைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு இடத்திற்குச் சென்ற பாதிரிவேடு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் கொலை செய்யப்பட்ட பெண் அங்குள்ள மதுபான கடையில் மது பாட்டிலை வாங்கிக் கொண்டு நடந்து செல்வதும், கூறப்படுகிறது அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து மர்ம நபர்கள் மூன்று பேர் சென்றதும் தெளிவாக பதிவாகி உள்ளது.


அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் பாதிரிவேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (25) தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் (21) கண்ணம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெபக்குமார் (24) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட பெண்ணை மூன்று பேர் தொடர்ந்து சென்று ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாகவும் அதற்கு அந்தப் பெண் உடன்படாததால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் அப்பெண்ணை தாக்கி தர தர என வயல்வெளியில் இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | "சேடிஸ்ட் முதல்வர் ஸ்டாலின்" அதிமுகவின் ஜெயக்குமார் கடும் விமர்சனம்! ஏன்


அப்போது உடலில் ஏற்பட்ட காயத்தால் அந்தப் பெண் கதிறியத்தையும் பொறுப்பெடுத்தாமல் மூன்று பேரும் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்றதை ஒப்புக்கொண்டதாக தெரிகிறது, இதனைத் தொடர்ந்து மூன்று பேர் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சென்னை புழல் நடுவன் சிறையில் அடைத்தனர், இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்ட பின்னரும் கொலை செய்யப்பட்ட பெண் யார் ? என்பதை அடையாளம் காண முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.


மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு? ஷாக்கிங் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ