தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் கொரோனா (Coronavirus) பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000க்கும் அதிகமாகிவிட்டது.


மறுபுறம் தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தொற்று (COVID-19 ) பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்திய அளவில் மகாராஷ்டிரா (Maharashtra), கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ALSO READ: Coronavirus New Symptoms: மிரளவைக்கும் கொரோனாவின் புதிய அறிகுறைகள்!


கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது. இதனிடையே, கடந்த மாதம் தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பாஜக வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 


இந்நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு (C V Shanmugam) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது அவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR