ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தாருக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த போராட்டமானது இந்தியா, வெளிநாடு உள்ளிட்ட இடங்களில் வெடித்தது. 


இதில் சேலத்திலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்தப்பட்ன. அப்போது, ரயில்களை நிறுத்தப் போவதாக கூறி, ரயில் மீது ஏறி போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அதில் இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 


இந்த நிலையில் உயிரிழந்த அந்த இளைஞரின் குடும்பத்துக்கு, 22 லட்சம் ரூபாய் செலவில் வீடு ஒன்றை நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டிக் கொடுத்துள்ளார்.