ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க முதலவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு கடிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஈரான் நாட்டில் தற்போது சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக தமிழக மீனவர்களை மீட்பதற்கு எடுக்குமாறு மோடிக்கு தமிழக முதலவர் கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். 


அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது..! 


ஈரானில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 21 மீனவர்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை இந்திய தூதரகம் மூலம் மீட்கவேண்டும் என தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து மீனவர்களின் பாஸ்போர்ட்-ஐ அவர்கள் பறித்து வைத்துள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


தமிழக மீனவர்கள் உணவு, தங்குமிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும்; ஈரானில் பணிக்கு அழைத்து சென்றவர்கள் மீனவர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை தேவை என்று தமிழக முதலவர் பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.