Pongal Festival 2023 Live: நிறைவடைந்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... பரிசுகள் அறிவிப்பு!

Sun, 15 Jan 2023-5:45 pm,

Pongal 2023 Festival Live Updates: தைப்பொங்கல் இன்று கொண்டாடப்படுகிறது. மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெற உள்ளது.

Pongal 2023 Festival Live Updates: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று (ஜன. 15) கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை விவசாயத்திற்கான, விவசாயிகளுக்கான, விவசாயத்துக்கு உதவும், சூரியன், பூமி, விலங்குகள், இவற்றுக்கான பண்டிகையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை இந்த தை மாதத்தில் அறுவடை செய்வோம். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்து, மஞ்சள் கொத்து கட்டிய புதுப் பானையிலிட்டு, புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் படைப்பது தைப்பொங்கல் திருவிழாவின் முக்கிய செயல்பாடாகும். 


மேலும், தமிழர்களின் பண்பாடு சார்ந்த விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. அந்த வகையில், பொங்கல் கொண்டாட்டங்கள் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சார்ந்த செய்திகளை உடனுக்குடன் இங்கு அறிந்துகொள்ளலாம். 

Latest Updates

  • Avaniyapuram Jallikattu 2023 Live சிறந்த மாடு பிடி வீரர்கள்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. இதில் அதிக காளைகளை அடக்கிய மூன்று சிறந்த மாடு பிடி வீரர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது. 

    28 காளைகளை பிடித்த மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த விஜய் முதலிடத்தை பெற்றார். 

    17 காளைகளை பிடித்து, உள்ளூர் அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்தி இரண்டாமிடத்தை பிடித்தார். 

    மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் 13 காளைகளை பிடித்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.   

  • Pongal Festival 2023 Live குடும்பத்துடன் SK

    நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் பொங்கலை கொண்டாடியுள்ளார். மேலும், பொங்கலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

  • கார்த்தி வாழ்த்து

    நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,"அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கட்டும்… நம் வாழ்க்கை சிறக்கட்டும்… தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்... Sankranti Subakankshalu" என பொங்கல், தெலுங்கில் சங்கராந்திக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

  • Avaniyapuram Jallikattu 2023 Live ஆறாம் சுற்று நிறைவு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 6ஆம் சுற்று நிறைவடைந்து, ஏழாம் சுற்று நடைபெறுகிறது. ஆறாம் சுற்று முடிவில், 442 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. 150 வீரர்கள் களமிறக்கப்பட்டனர். 

  • Avaniyapuram Jallikattu 2023 Live 52 காளைகளுக்கு மறுப்பு

    அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் நண்பகல் 1 மணி நிலவரபடி மொத்தம் 680 காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தப்பட்டுள்ளது. இதில், 52 காளைகள் உரிய சான்றிதழ்கள், உரிமையாளர் வராத காரணத்தால் அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Avaniyapuram Jallikattu 2023 Live 19 பேருக்கு காயம்

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் தற்போதைய நிலவரப்படி 19 பேர் காயமடைந்துள்ளதாக வருவாய் துறை அறிவித்துள்ளது. 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

  • Avaniyapuram Jallikattu 2023 Live போலீஸ் தடியடி

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனுமதி இல்லாமல் இருக்கும் ஜல்லிக்கட்டு காளைகளை மருத்துவ பரிசோதனை மையத்தில் இருந்து வாடிவாசல் போகும், கம்பு கட்டி இருக்கும் பாதையில் காளைகளை நடுவில் நுழைக்க காளையின் உரிமையாளர்கள் முயற்சித்தனர். இதனால் காளையை முறையாக பதிந்து வந்தவர்களுக்கும் முறையாக பதியாமல் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பதிவு செய்த மாடு உரிமையாளர்கள் குரல் கொடுத்த பின்னர் தடியடி நடத்தி கலைத்தனர். 

  • Pongal Festival 2023 Live பிரதமர் மோடி வாழ்த்து

    தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ் வாசகம் அடங்கிய வாழ்த்து அட்டையை அந்த பதிவுடன் இணைந்து பதிவிட்டுள்ளார். 

  • Pongal Festival 2023 Live திருவண்ணாமலையில் பக்தர்கள் தரிசனம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தைப் பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை முதல் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். 

     

  • Avaniyapuram Jallikattu 2023 Live இரண்டாம் சுற்று நிறைவு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் சுற்று நிறைவு பெற்றது. மூன்றாம் சுற்று தொடக்கம். 

  • Pongal Festival Live 2023 டிஜிபி பொங்கல் வாழ்த்து

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு வேஷ்டி சட்டையில் பொங்கலிட்டுள்ளார். மேலும், தனது பேஸ்புக் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துடன் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். 

  • காயமடைந்தோர் எண்ணிக்கை 

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 5 பேர் படுகாயமும், 4 பேருக்கு சிறு காயமும் ஏற்பட்டுள்ளது. இதில், 3பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பிவைப்பு

  • முடிந்தது முதல் சுற்று

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று நிறைவடைந்து, இரண்டாம் சுற்று நடைபெற்று வருகிறத. ஒவ்வொரு சுற்றும் 45 நிமிடங்கள் நீடிக்கும். 

  • தொடங்கியது ஜல்லிக்கட்டு

    மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. விழாவில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்பு. 

  • இதுவரை 3 பேர் காயம்!

    போட்டிக்காக வாகனங்களில் கொண்டு வந்த காளைகளை வாகனங்களில் இருந்து இறக்கும்பொழுது தத்தனேரியைச் பகுதியை சேர்ந்த விஷ்ணு காளையின் உரிமையாளர், அவருடன் வந்த மாடசாமி மற்றும் பனையூர் பகுதியைச் சேர்ந்த காளையின் உரிமையாளர் ஆறுமுகம் ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக காளையின் உரிமையாளர் ஆறுமுகத்தை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார். 

  • அவனியாபுரம் ஜல்லிக்கட்டு - பாதுகாப்பு ஏற்பாடுகள் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    வாடிவாசலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள் காளைகளை அடக்க வேண்டும்,

    வாடிவாசல் பகுதியில் இருந்து 50 மீட்டர்  தூரம் முழுவதும் தேங்காய் நார் பரப்பபட்டுள்ளது.

    போட்டி நடைபெறும் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

    மாநகர காவல்துறை ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் 1300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  • பரிசுகள் விவரம்

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக காரும், சிறந்த காளைக்கு இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    போட்டிகளில் கலந்துகொண்டு காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க நாணயங்கள், சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் ,குக்கர் போன்ற பரிசுகள் அறிவிப்பு

  • அனுமதி சீட்டு அடிப்படையில்...

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில் இருந்து கலெக்சன் பாயிண்ட் சென்றவுடன் மீண்டும் ஒரு மருத்துவ பரிசோதனை செய்ய இந்த ஆண்டு முடிவு

    இந்த ஆண்டு ஆன்லைனில் பதிவு செய்த உரிமையாளர்களை, அனுமதி சீட்டு அடிப்படையில் வரிசையாக அனுப்ப முடிவு

    காளைகளை பரிசோதனை செய்ய 93 மருத்துவர்கள் அடங்கிய 40 மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது

  • காளைகளுக்கு பரிசோதனை

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட காளைகளுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு QR-Code மற்றும் புகைப்படம் ஆதார் எண் அடங்கிய அனுமதி அட்டை விநியோகம்

    காளைகளின் உயரம் கொம்பு உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்யும் இறுதி கட்ட மருத்துவ பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த ஆண்டு காளைகள் ஏற்றி வரும் வாகனங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் விதிப்பு

  • பாய காத்திருக்கும் 600 காளைகள் 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்களும் 600 காளைகளும் பங்கேற்கும் - மாவட்ட நிர்வாகம் தகவல்

    போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைக்கும் முறை குறித்தும், நல்ல நேரம் குறித்தும் பிரபல ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் கொடுக்கும் தகவல்களை இங்கு காணலாம். 

  • இன்று பொங்கல் வைக்க நல்ல நேரம், காலை 7.40 மணி முதல் 9.40 மணியாகும். இந்த நேரத்தில் அமோகமான ராஜயோகம் அமைவதாடு மட்டுமில்லாமல், சுக்கிர மற்றும் புதன் ஓரையும் உள்ளன. இந்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட்டால், சூரியன் அதிகப்படியான மகிழ்ச்சியை அடைந்து உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு, கல்வி, நிம்மதி என அனைத்தையும் தந்து அருளுவார் என்பது நம்பிக்கை.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link