தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் திட்டம் முக்கியமான திட்டமாகும். ஆட்சிக்கு வந்ததும் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும் அறிவித்து இருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டதிலிருந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனால் அவரது அறிவிப்புகளால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 


ALSO READ | Budget: தமிழக பட்ஜெட் வெள்ளை அறிக்கையில் என்ன தகவல் இருக்கும்?


இந்நிலையில் தற்போது தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு (Teachers) 6 லட்சம் முதல் 14 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.


இந்த கடன் உதவு ஆசிரியர்கள் திருமணம் செய்யவும், புதிய பைக் அல்லது கார் வாங்கவும் கடன் உதவி அளிக்கப்படும். மேலும் இந்த கடன் உதவி ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. 


ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு மிகக் குறைந்த வட்டி தான் அவர்களிடம் இருந்து பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அறிவிப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | தொழில்துறையில் நாங்கள் அமைத்த அடித்தளத்தை செம்மையாக பயன்படுத்துங்கள்: EPS


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR