வரும் 22ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள பள்ளி வாசல் மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஷேக் பீர் முகமது ஒலியுல்லாஹ் நினைவாக  திருவிழா கொண்டாடப்படும்.


அந்தவகையில் இந்த ஆண்டு தக்கலை ஷேக் பீர் முகமது ஒலியுல்லாஹ் விழா வரும் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 22ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.