சென்னை: விவசாய நிலங்களை தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திரபதிவு செய்ய விதித்துள்ள தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை பத்திர பதிவு செய்ய, பத்திர பதிவு துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 


இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விவசாய நிலங்களை வீட்டைமனைகளாக மாற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.


மேலும் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படத்துவதற்கு தமிழக அரசுக்கு பிப்ரவரி 27-ம் தேதி வரை அவகாசம் அளித்தும் உத்தரவிடப்பட்டது.