சென்னை: மருத்துவ சேர்க்கைகளில் நீட் ஏற்படுத்திய தாக்கத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு அமைத்த உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. அதாவது நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைத்ததற்கான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன்  வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த  மெட்ராஸ் உயர் நீதிமன்றம்,  "நீட் ஆய்வுக்குழு செல்லும்  எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக மாநில செயலாளர் கே.நாகராஜன் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கி மெட்ராஸ் ஐகோர்ட் சி.ஜே.சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தனர். 


இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுமக்கள் கருத்தை கேட்டு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறதா? இல்லையா? என்ற உண்மையை அறிய தமிழக அரசு விரும்பினால், அதை தடுக்க அதிகாரம் இல்லை. மேலும் இந்த ஆய்வுக்குழு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது இல்லை.


எனவே தமிழக அரசு அமைத்த நீட் ஆய்வுக்குழு செல்லும்.  நீட் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு தடை வித்ஹிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.


ALSO READ  | AK Rajan NEET குழு நியமனம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறானதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR